Thursday, August 1, 2013

மனம் என்பது.....


கருவறை போன்றது – ஒருவனின்
அனுவை சுவைப்பது போன்று
ஒருவரின் நினைவை மட்டும்
சுமங்கள்……

குழந்தை போன்றது
தொலைத்து விடாதீர்கள்
தவித்துப்போய் விடுவீர்கள்…

சிப்பி போன்றது – சிறு
மழைத்துளியை பல்லாண்டு
சுமந்து முத்தாவது போன்று
சுகமான நினைவுகளை சுமந்து
விலையற்ற முத்துக்களை
உருவாக்குங்கள்…..

கல் போன்றது
வலி எனும் உளி கொண்டு
சிலை செய்யப்பழகுங்கள்….

பஞ்சு போன்றது – அதற்காக
பலரின் நினைவுகளுக்கு
பஞ்சனையாக்கிடாதீர்கள்…

கண்ணாடி போன்றது
சிதறிவிட்டதை சேர்த்தாலும்
வெறும் காட்சிப்பொருளாகுமேயன்றி
காயங்களை களைந்திடமுடியாது….


மலர் போன்றது
மாசில்லாமல் பூத்திருங்கள்
மாலையாகும் நாளொன்று வரும்….

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை