Thursday, February 6, 2014

புலம்பெயர்ந்தும் குணம்பெயரா தமிழர்கள்!


நம்ம தமிழ் மக்கள் இனவழிப்பு இயக்கத்தொடர்பு என்று பல காரணங்களுக்கு பல அழுத்தங்களுக்கு மத்தியில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். இங்கு வேட்டியுடன் அல்லது அரைக்காற்சட்டையுடன் திரிந்தவர்கள் இன்று நல்லா டெனிம் உடுத்தி, குளிர் கண்ணாடி போட்டு தலைமுடியை ஏதோவெல்லாம் செய்து (சில அங்கிள்களுக்கு முடியில்லை என்பது வேறு விடயம்) சும்மா சொல்லக்கூடாது சினிமா நடிகர் போல் தானிருக்கிறார்கள். பெண்கள் மட்டும் என்ன இங்கு சுடிதார், சாறி என்று திரிந்தவை அங்கு நல்லா மொடன் ட்ரஸ் போட்டு அம்சமாகதானிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த எந்த தமிழ் பிள்ளையல்ட கேட்டாலும்….. இங்கு ஒன்று கவனிக்கனும் நாம கதைக்கிற தமிழ் விளங்கும் அதுகளுக்கு ஆனா பதில் இங்கிலீஸ் அல்லது தங்கிலீஸ் அதாங்க தமிழ் பிளஸ் இங்கிலீஸ் ல தான் வரும்…  அது ஒரு புறமிருக்க நான் சொல்ல விஷயம் என்னென்றால்…..???

இலங்கையின் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றின் விளம்பரப் பக்கங்களில் பார்த்தீர்கள் என்றால் மணமகள் தேவை மணமகன் தேவை என்ற பகுதியும் வருகுது. ஆத ஒருக்கா புடிட்டிப்பாத்தீங்க என்டா அப்பயே ஷாக் ஆகிடுவீங்க……

அழகான, சிவந்த, படித்த , மெல்லிய (இதில எனக்கு கொஞ்சம் கடுப்பு தான்)….. குறிப்பிட்ட வயதெல்லைக்குட்பட்ட என்று பட்டியல் நீளுது…. இதுக்கெல்லாம் முன்னுக்கு பாத்தீங்க எண்டா… “வேளாளர்” “உயர் வேளாளர்” “நாடார்” ….. இப்படியென்று சாதிப்பெயர் போட்டிருப்பாருங்க.. நம்ம சனங்க எங்க தான் போனாலும் கொண்டு போற விஷயங்கள்ல சாதியொன்று மற்றது சீதனம். இது அமெரிக்கா,லண்டன், கனடா என்று போனாலும் மாறவேயில்லைங்க.

“ விவசாயம் செய்றவை – வேளாளர், மரம் ஏறுனா – நளவன், மீன் பிடிச்சா – கரையாரவன்….” இப்படி இந்த சாதிப்பெயரெல்லாம் தொழிலடிப்படையில் தான் அந்தக்கால கிழடுகள் உருவாக்கிச்சு… பரவாயில்ல பழசுகள் ஏதோ தெரியாம செய்துட்டுகள் என்று விட்டுட்டு போவம் என்று இல்லாம இப்ப கொம்பியூட்டர் என்ஜீனியர் தொடக்கம் லண்டன் ஹொட்டல்ல வேல செய்றது முதல் இந்த சாதிய ஏதோ யூனிவசிட்டி டிகிரி மாதிரியே கொண்டு திரியுதுகள். தெரியாமத் தான் கேட்கிறன் தொழிலடிப்படை தான் சாதியென்டா வைத்தியர் எப்படி வேளாளன் ஆகலாம்? அல்லது என்ஜினியர் எப்படி கரையாரவன் ஆகலாம்… இதென்னங்க நியாயம்???

 அடுத்த விஷயம் இந்த டவரி…. அதாங்க ஆம்பிள்ள வீட்டாக்கள் பொண்ணு வீட்டில கௌரவமா எடுக்கிற பிச்சை! மாப்பிளையும் என்ஜினியர் பொண்ணும் என்ஜினியர் ஆனா மாப்பிளைக்கு சீதனம் கொடுக்கனும். கேட்டா அவர படிப்பிக்க செலவாச்சாம். அடிங்கொய்யால அப்ப பொண்ணுக்கு மட்டும் என்ன படிப்பு செலவுக்கு டிஸ்கவுண்டா கொடுக்கிறாங்க…. வீட்டில எதிர்காலத்தில செய்ய போற வேலைகளுக்கும்… வாரிச பத்து மாதம் சுமப்பதற்கும் ஆம்பிள்ள தாங்க பொண்ணு வீட்டுக்கு கொடுக்கனும். இத விட கொடுமை என்னன்டா நம்ம அப்பாக்கள் கொடுக்கிற காசிலேயே தாலிய வாங்கி நம்ம கழுத்திலேயே கட்டிட்டு “தாலி பொண்ணுக்கு வேலியாம்” அத எப்ப சொல்லனும் தெரியுமா? நம்ம காசில நம்ம மனைவிக்கு அரைப்பவுண் என்டாலும் நாமாக செய்து போட்டுட்டு அதுக்கப்புறம் சொல்லனும்…

இந்த பிரச்சினையை கேலியாக எழுதியிருந்தாலும் இவ்வாறான பிரச்சினைகள் உயர் மட்டத்திலிருப்பவர்களையோ அல்லது மேல்மட்ட பெண்களையோ பாதிப்பதில்லை. ஆனால் கீழ்மட்டத்தில் உள்ள (இந்த மட்டங்கள் பொருளாதார அடிப்படையிலானவை) பெண்களை நிறையவே பாதிக்கின்றது என்பதுவே உண்மை. ஆரசியலில் சமவுரிமை கேட்கும் நாம் என்று சமையலறையில் இருந்து பெண்ணுக்கு விடுதலை கொடுக்க போறம்???? என்னதான் தமிழன் புலம்பெயர்ந்தாலும் அவனை விட்டு பெயராத குணங்கள் இவை…..

இதென்ன புலம்பெயர்ந்தவர்களை மட்டும் சுட்டுகின்றேன் என்று நீங்கள் நினைக்கலாம்.. அதுக்கும் காரணம் இருக்குங்க இந்த அடிபாடுகளுக்கு பின் நம்ம நாட்டு சனங்கள் கொஞ்சம் திருந்திட்டினம் ஆனா இந்த புலம்பெயர்ந்தவை தான் இன்னும் கொஞ்சம் திருந்த வேண்டியிருக்கு... போடுற உடுப்பிலயும் செண்டிலயும் தான் மாறியிருக்கினம் ஆனா இந்த பாரம்பரியங்கள மட்டும் உடும்பா இன்னும் பிடிச்சிருக்கினம்.....

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை