Friday, September 6, 2013

முயலாமையால்……


நிலை - 01

ஒரு காட்டில ஒரு முயலும் ஒரு ஆமையும் இருந்திச்சாம். (ஒன்று ஒன்று தானா இருந்தது என்று எடக்குமுடக்கா கேட்க கூடாது சொல்லிப்புட்டன்). இரண்டுக்கும் இடையில் யாரு நல்லா ஓடுவாங்க ? என்ற விடயத்தில் பிரச்சினை வந்தது. இந்த சண்டை முடிவில் ஓட்ட பந்தயம் வைக்கிறது என்று முடிவானது.

பந்தயம் தொடங்கியதும் பாஞ்சு விழுந்து ஓடிய முயல் சற்று தூரம் போனதும் திரும்பி பார்த்தது. ஆமை ஆரம்ப புள்ளியிலிருந்து கொஞ்ச தூரம் தான் நகர்ந்திருந்தது தெரிஞ்சுது…..  சப்பா கொஞ்சம் டயடா இருக்கு… ரெஸ்ட் எடுத்துட்டு ஓடுவம் என்று மரத்திற்கு கீழ குந்தின முயல் அப்படியே தூங்கிட்டுது…. தடார் என்று எழும்பி பார்த்தா ஆமை கோல்ட் மெடலோட கையில் பிளவர் பஞ்சோட சிரிச்சுக்கொண்டு போட்டோக்கு போஸ் குடுத்துக்கொண்டிருந்தது. “ஐயோ சோம்பேறிதனத்தால தூங்கிட்டமே” என்று தன்னையே நொந்து கொண்டது முயல். அன்று இரவு புல் பொட்டில் சாராயம், சிக்ரட் பைக்கற் என்று கவலையை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டது.

இது முயல்  + ஆமை (யால்) =  முயலாமையால் தோற்கடிக்கப்பட்ட கதை
(வெயிட் நீங்க கடுப்பாவது புரியுதுங்க…..)

நிலை – 02

எப்படியோ வென்றிட்டமே இனி நான் ஒலிம்பிக்கில ஓடலாம் என்று நினைத்த ஆமை டெய்லி ப்ரக்டீசுக்கு போய்க்கொண்டிருந்தது. இத பார்த்த முயல் “ஹலோ ஏதோ ஒரு நாள் வெற்றி பெற்றிட்ட பட் இனி உன்னால் முடியாது” என்று ஆமையை வம்புக்கிழுத்தது. “ஏய் மிஸ்டர் வேனுமினா இன்னொருக்கா ஓடி பாரும்…..” என்று பதிலடி கொடுத்தது ஆமை. அவ்வளவு தான் முயல் “மீண்டும் ஓடி பார்ப்பமா?....” என்று கேட்டது. ஆமையும் ஓவர் கொன்பிடன்ஸ்ல மண்டையை ஆட்டியது.

இரண்டாவது பந்தயம் ஆரம்பமானது. முயல் மூச்சுப்பிடிச்சு ஓடியது. ஆமை ஒரு கிலோமீற்றர் தாண்டுறதுக்குல்ல அது போய் சேர்ந்துவிட்டது..... வெற்றி பெற்ற முயல்ற ஹாண்ட்சத்தை பார்த்து பல தயாரிப்பாளர்கள் கரட் யூஸ், டூத்பேஸ்ட் விளம்பரங்களுக்கு அப்பவே புக் பண்ணிட்டாங்க என்றால் பார்த்துக்கொள்ளுங்களன்….. இங்கே ஆமை ஓவென்று அழுதுகொண்டிருந்தது.

இது ஆமை முயற்சி செய்யாமையிலால் அதாவது “முயலாமையால்” தோற்ற கதை…

நிலை – 03

இந்த முறை ஆமையும் முயலும் சொப்பிங் செண்டர்ல கண்டும் காணாததும் போல இருந்தாலும் இருபக்க அள்ளக்கைகளும் சும்மா இருக்க முடியாம திரும்ப ஒரு ரேஸ் வைப்பமா என்று ஆளாளுக்கு உசுப்பேத்தின. இனி என்ன செய்வதென்று நம்ப ஹீரோ முயலும் ஹீரோயின் ஆமையும் (நோட் திஸ் பொயிண்ட்) சம்மதித்தன. பட் இந்த தடவை ஒரு நிபந்தனை போட்டது ஆமை. “ஒரே வீதியில் மட்டும் ஓடாம இந்த தடவை நீச்சல் போட்டியும் வைக்க வேண்டும்” என்றது. முயலக்கு இது தன்மான பிரச்சினையாகிவிட்டது. ஒரு பொண்ணுட்ட நான் தோற்பதா? என்று…. “என்ன நாங்க நீந்தமாட்டம் என்று நினைத்தீங்களா…. பொறுத்திருந்து பார்…..” என்று சவால் விட்டு சம்மதித்தது.

3வது போட்டி தொடங்கியது. தரையில் பாய்ந்தோடிய முயல். தண்ணீரை கண்டதும் அப்படியே நின்று விட்டது. அப்போது தான் முயலுக்கு ஸ்விம்மிங் கிளாஸ் போயிருக்கலாமோ என்று தோன்றியது. பட் இட்ஸ் டூ லேட்… ஆமை நல்லா ஸ்விம் பண்ணி போய் இலக்கை அடைந்துவிட்டது. இதிலென்ன ஆச்சரியம் என்றால் முயலும் போய் ஆமையை விஷ் பண்ணியது.
அன்றிலிருந்து எங்காவது கண்டால் இரண்டும் ஹாய் சொல்லிக் கொண்டன. முயல்ற கனவுல ஆமை ஸ்விம்மிங் டிரஸ்ல வாறதும்: ஆமையோட கனவுல கஜனி சூர்யா ரேஞ்சில் “சுட்டும் விழி சுடரே…..” என்று முயல் வாறதும் தொடர்ந்தன. ஒரு நாள் “ ஐ லவ் யூ டா செல்லம்…” என்று முயல் காட்டுப்பூ ஒன்றை கொடுக்க “மீ டூ டியர்” என்று ஆமையும் வாங்கிக்கொண்டது. ஆக மொத்ததில் மோதலில் தொடங்கிய உறவு காதலில் முடிந்தது.

இது முயல் + ஆமை இரண்டும் முயற்சி செய்யாமல் மோதி அதாவது “முயலாமையால்” காதலில் வென்ற கதை.

நிலை – 04

இப்படியே இருக்கும் போது நம்ம கதாநாயகர்கள் படிக்கும் யூனிவர் சிட்டியில் ஓட்டப்பந்தயம் ஒன்று ஏற்பாடாகியது. இருவரது விரிவுரையாளர்களும் தங்களது மாணவர்களது சம்மதத்தினை கேட்காமலேயே இருவரது பெயரையும் கொடுத்துவிட்டனர். இந்த முறை பலர் இதில் கலந்துகொண்டனர்.

4வது பந்தயம் தொடங்கியது. இந்த தடவை தரை வழிப்பாதையில் ஓடும் போது முயல் ஆமையின் கையை பிடித்துக்கொண்டு ஓடியது. நீர்வழிப்பாதையில் ஆமை முயலுக்கு உதவிசெய்தது. இருவரும் ஒரே நேரத்தில் இலக்கை அடைவதற்கு முன் ஆமை முயலுக்கு விட்டுக்கொடுக்க…. முயல் ஆமைக்கு விட்டுக்கொடுக்க…. என்று சென்டிமெண்ட் பிரச்சினை நடந்துகொண்டிருக்கும் போது பின்னால் வந்த அனிமல் முன்னுக்குப்போய் மெடல் வாங்கியது. (மெடலா முக்கியம் செண்டிமென்ட் தான் முக்கியம்.)

இது முயல் ஆமையாலும் , ஆமை முயலாலும் ஆக மொத்தத்தில் “முயலாமையால்” தோற்ற கதை

நிலை – 05

இது அவங்க பேசனல் பந்தயம்… சொறி ஓட்டம் அதாவது இருவரது காதலும் இரு வீட்டுக்கும் தெரிய வந்து காட்டு நாட்டாமை சிங்கத்தின் தீர்ப்பினால் இருவரும் ஓடிப்போன கதை… அடுத்தவங்க தனிப்பட்ட விடயத்தினை பற்றி கதைப்பது நல்லதில்லைங்க… நமக்கேன் வம்பு? எந்தக் காட்டிலாவது பல்லாண்டு காலம் வாழட்டும்.

இதுவும் முயல் + ஆமை காதலால் அதாவது “முயலாமையால்” காடு தீப்பற்றிய கதை. 

என்னை கதை சொல்லு கற்பனையை வளர்த்துக்கொள் என்று பல்கலைக்கழக வாத்தியார் சொன்னாலும் சொன்னர்.... கற்பனை பிச்சுக்கொண்டு ஓடுது.... இனிமேலும் யாரும் குழந்தைகளை ஏமாற்றாமல் , இந்த பாட்டி வடை சுட்டா என்று அல்லது முயல் ஆமை என்று சொன்ன கதையையே திரும்ப சொல்லாம கொஞ்சம் வித்தியாசமா யோசிங்கப்பா....  இல்லாட்டி எனக்கு கோல் போட்டும் கதை கேட்கலாம்.....

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை