Tuesday, July 8, 2014

மீள் நிரப்புதல்...

எண்ணெய் குடுவைக்குள்
நீரை நிரப்பிடல் உண்டா?
நீரின் மேற்பரப்பில்
எண்ணெய் படலமாக
உன் நினைவுகள்....

சரமாகும் மல்லிகைக்கு
பதில் தாமரையை
கோர்த்திடலாமா...?
நினைவுச்சரங்களின்
ஒவ்வொரு சிக்கிலும் -
நம் சந்திப்புக்கள்...

விஷச்சாடிக்குள்
பாலூற்றிப் பருகுவதும்..
உன் கனவுளை துடைத்தெறிந்து
விட்டு இன்னொருவன்
நினைவை நிரப்புவதும்
சாத்தியமற்றதாகியே
விடுகின்றது...

கவிதைகள்...
கனவுகள்...
நினைவுகள்... அனைத்திலும்
மீள்நிரப்பிட முடிந்திடா
பொருளாகியே
போகின்றாய்.... – நீ
என்னை (மட்டும்) விட்டே...

நாளை என்
மண மேடையும்
மரண மேடையும் - உன்
நினைவுகளாலான
மீள் நிரப்பலினால்
அலங்கரிக்கப்பட கூடும்...
அந்த நிரப்பல்களின்
மெல்லிய விளிம்புகள் வரை
என் இறுதி மூச்சுக்களே
நிரம்பியிருக்கும்....

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை