Monday, March 3, 2014

நனைந்திடவே விரும்புகின்றேன்…

கருமுகில்களை
மழைத்துளிகளையும் - அதில்
முழுவதுமான நனைதலையும்
நேசிக்கின்றேன்….
இயற்கையை அனுபவித்திடவல்ல!!!

அம்மாவின் திட்டுக்களை
பாட்டியின் அதட்டல்களை
கசாயத்தின் கசப்பையும் – மீறி
நனைந்திடவே விரும்புகின்றேன்…
பிடிவாதத்தினாலல்ல…..

பையில் குடை இருப்பினும்
ஒதுங்கிட இடமிருப்பினும்
அனைத்து செல்ல உறவிருப்பினும்
நனையவே முற்படுகின்றேன்
நனைதலை ரசிப்பதற்கல்ல

உன்னாலான வலிகளை – என்
நனைந்த விழிகள்
காட்டிட கூடாதென்பதற்காகவே
தினமும் நனைகின்றேன்!!!
(25.02.2014)

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை